புதுச்சேரியில் புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று; ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று; ஒருவர் உயிரிழப்பு
Updated on
1 min read

புதுச்சேரி மாநிலத்தில் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (டிச.1) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2,354 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 25, காரைக்காலில் 4, ஏனாமில் 1, மாஹேவில் 11 பேருக்கும் என மொத்தம் 41 பேருக்கு (1.74 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 60 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 229 பேரும் என மொத்தமாக 289 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் மாஹே பகுதியைச் சேர்ந்த 86 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,873 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.45 சதவீதமாக இருக்கிறது. புதிதாக 35 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 803 (98.32 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 12 லட்சத்து 34 ஆயிரத்து 704 பேருக்கு (இரண்டாவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in