காவிரி பகுதியில் கனமழை: தமிழகத்துக்கான நீர்வரத்து 23,000 கன அடியாக அதிகரிப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

தொடர் கனமழை காரணமாக காவிரியில் இருந்து தமிழகத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு 23,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகவே காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளான கே.ஆர்.எஸ் மற்றும் கபினி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்திற்கு 5,000 முதல் 6,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வந்தது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் நேற்று தமிழகத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

தீவிர மழைப்பொழிவு காரணமாகத் தமிழகத்திற்கு இன்று கூடுதலாக 13,000 கன அடி நீர் திறக்கப்பட்டு, 23,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை எட்டியுள்ளது.

சாதாரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடி எட்டினால் ஒகேனக்கல் அருவிகளில் அதிக அளவிலான நீர் தேங்கி நிற்கும். தற்போது மேட்டூர் அணை 114 அடியை எட்டியுள்ளதால் அதிகப்படியான நீர் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in