

சட்டக்கல்வியின் தரத்தை உறுதிப் படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும் என சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்களுக்கு உதவுவ தற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் நலநிதி அறக் கட்டளை தொடக்க விழா நிர்வாக நீதிபதி எம்.துரைசுவாமி தலை மையில் நடைபெற்றது.
அறக்கட்டளை நிறுவனர் மற்றும் மேலாண்மை அறங்காவலரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வரவேற்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், அறக்கட் டளையின் நோக்கத்தை எடுத் துரைத்தார். அறக்கட்டளைக்கு முதல் நன்கொடையாக மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வழங்கிய ரூ.10.50 லட்சத்துக்கான காசோலையை அறங்காவலர்கள் ஆர்.காந்தி, ஆறுமுகம் ஆகி யோரிடம் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி வழங்கினார்.
பின்னர், தலைமை நீதிபதி பேசியதாவது: வழக்கறிஞர் தொழில் எளிதானது அல்ல. இதில் வெற்றிபெற கடுமையான உழைப்பும், நேர்மையும் அவசியம். நாட்டில் 2,800 சட்டக்கல்லூரிகள் உள்ளன. சமீபத்தில் சட்டக் கல்வியை முறையாக பயிலாமல் வழக்கறிஞர்களாக வருகின்றனர். சட்டக்கல்வியின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டியது காலத் தின் தேவையாகும். கல்வி ஒரு மனிதனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு என்பது பெயருக்கு பின்னால் மட்டும் குறிப்பிடுவதற்காக இருக் கக் கூடாது.
நீதித்துறை என்பது நீதிபதியை மட்டும் சார்ந்தது அல்ல. வழக்கறிஞர், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் சேர்ந்தது தான் நீதித்துறை. நீதி வழங்குவது என்பது இறைப்பணி அல்ல. அது மற்ற அரசுப் பணிகளை போலவே சமூக கடமைகளை நிறைவேற்றும் ஒரு பணியாகும். இறைப்பணியை இறைவனை தவிர வேறு யாராலும் மேற்கொள்ள முடியாது. பொதுப்பணியில் இருப்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அறக்கட்டளைக்கு நிதி வழங்கிய நீதிபதி புகழேந்தி மற்றும் வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி விருது வழங்கி பாராட்டினார். உயிரிழந்த வழக் கறிஞர்கள் சிவகுமார், அன்பு சரவணன் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
வழக்கறிஞர்கள் பினேகாஸ், அருண்சுவாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பெண் வழக்கறிஞர் சங்கத் தலை வர் ஆனந்தவல்லி நன்றி கூறினார்.