

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 6,156 ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகள் தொடர் பணி நீட்டிப்பு வழங்கி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணை;
தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6,156 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான பணிக்காலம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்துவிட்டன. இந்த 6,156 பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் வரை (2021-23) தொடர் நீட்டிப்பு வழங்கக்கோரி பள்ளிக்கல்வி ஆணையர் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தார். அதை பரிசீலனை செய்து 6,156 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு 2023 டிசம்பர் 31-ம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறுஆய்வில் முடிவெடுக்கும் வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.