கோரிக்கை மனுக்கள் மீது முடிவெடுக்க அதிகாரிகளுக்கு போதிய அவகாசம் தராமல் வழக்கு தொடரக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோரிக்கை மனுக்கள் மீது முடிவெடுக்க அதிகாரிகளுக்கு போதிய அவகாசம் தராமல் வழக்கு தொடரக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் பரிசீலிக்க உரிய கால அவகாசம் வழங்காமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை பூதலூர் தாலுகா மாரனேரி பகுதியில் பட்டா வழங்கக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் பலர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:

பலர் போதுமான ஆவணங்கள் இல்லாமல், தாங்களின் கோரிக்கையை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றம் வருகின்றனர். பெரும்பாலானோர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பிய ஒரு வாரத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கின்றனர்.

இந்த மனுக்களை தினமும் விசாரித்து இயந்திரத்தனமாக உத்தரவிடும் நிலை உள்ளது. இந்த மனுக்களால் நீதிமன்றத்தின் பொன்னான நேரம் வீணடிக்கப்பட்டு, பல நல்ல வழக்குகள் முடியாமல் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. 10 ஆண்டுக்கு மேலாக கூட வழக்குகள் முடிக்கப்படாமல் உள்ளன. இது வேதனை தருகிறது.

அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு, அந்த மனு அனுப்பப்பட்டதற்கான ஒப்புகை சீட்டு ஆகியற்றை மட்டும் ஆவணங்களாக தாக்கல் செய்கின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலத்தை பல ஆண்டுகளாக அனுபவித்து வருவதால் மனுதாரர்கள் பட்டா உரிமை கேட்டுள்ளனர்.

இது போன்ற வழக்குகளில் நீதிமன்றத்தின் அதிகாரத்தை வீணாக்கக்கூடாது. இந்த விபரங்களை வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு தெரிவிக்க வேண்டும். கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் பரிசீலிக்க உரிய கால அவகாசம் வழங்காமல் நீதிமன்றத்தை நாடக்கூடாது.

இதுபோன்ற மனுக்களை ஊக்கப்படுத்த முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in