

புதுச்சேரியில் ரூ.320 கோடியில் கட்டவுள்ள புதிய சட்டப்பேரவை வளாகம் அடிக்கல் நாட்டு விழாவுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகஸ்டில் புதுச்சேரி வரவுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்திற்கு ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் தட்டாஞ்சாவடியில் உள்ளஅரசு இடத்தில் கட்டுவது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் நேற்று மாலை கூட்டம் நடந்தது.
அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் அஸ்வனி குமார் முன்னிலை வகித்தனர். துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற் றனர்.
இக்கூட்டத்தில் பேரவைத் தலைவர் செல்வம், புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அரசு செயலர்களிடம் கூறினார்.
முன்னதாக, புதிய சட்டப்பேரவை வளாகம் அமைய உள்ள இடத்தில் தற்போது இயங்கிவரும் அரசுத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் பேரவைத் தலைவர் தலைமையில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் தற்போது இயங்கி வரும் அரசுத்துறை அலுவலகங்களுக்கு மாற்றிடம் ஒதுக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இதுபற்றி பேரவைத் தலைவர் செல்வம் கூறுகையில், “புதுச்சேரியில் புதிய சட்டப் பேரவை அடிக்கல் நாட்டு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.
இதற்கான பூமி பூஜையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். 16 மாதத்திற்குள் புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டி முடிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தட்டாஞ்சாவடியில் 16 மாதத்திற்குள் புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டி முடிக்கப்படும்” என்று தெரிவித்தார்.