

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவைத் தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
மாற்றப்பட்ட அதிகாரிகள், அவர்கள் முன்பு வகித்த பதவி விவரம்:
1. ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையராக முன்பு பதவி வகித்த சி.முனியநாதன் தொழில்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. நில சீர்திருத்தத் துறை ஆணையராக முன்பு பதவி வகித்த ஆர்.லில்லி தொழில்துறை சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. நிதித்துறை சிறப்புச் செயலாளராக பதவி வகிக்கும் பூஜா குல்கர்னிக்கு, தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
4. நகர திட்டமிடுதல் முன்னாள் இயக்குநரான கணேசன், சாலைப் போக்குவரத்துத் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. உயர்கல்வித் துறை துணை செயலாளர் எம்.எஸ்.சங்கீதா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இணை மேலான் இயக்குநராக கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது