

புதுச்சேரியில் புதிதாக 264 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (ஜூன் 30) வெளியிட்ட தகவல்:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 8,098 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 207 பேருக்கும், காரைக்காலில் 40 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும், மாஹேவில் 15 பேருக்கும் என மொத்தம் 264 (3.26 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரைக்கால், மாஹே, ஏனாமில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,749 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவே உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 249 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மருத்துவமனைகளில் 370 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,984 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 2,354 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 254 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 146 (96.50 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 13 லட்சத்து 8 ஆயிரத்து 198 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் 11 லட்சத்து 23 ஆயிரத்து 586 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 4 லட்சத்து 93 ஆயிரத்து 657 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது''.
இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.