Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

நடைமேடை கட்டணம் ரூ.50 செப்டம்பர் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களில் ஒருவருக்கு ரூ.50 என வசூலிக்கும் நடைமேடை கட்டண முறை வரும் செப்டம்பர் 16-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில் பயணிகளிடமிருந்து வரும் தொடர் கோரிக்கைகளைக் கருத்தில்கொண்டு, குறிப்பிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் நடைமேடை (பிளாட்பார்ம்) டிக்கெட்களை வழங்க தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அனுமதித்துள்ளது. கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த மார்ச் 17-ம் தேதி முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ரயில்நிலையங்களில் மட்டும் நடைமேடை டிக்கெட்கள் வழங்கப்படுகிறது.

டிக்கெட் கட்டணம் ஒருவருக்கு ரூ.50 என வசூலிக்கப்பட்டு வருகிறது. கரோனா பாதிப்பு முழுவதுமாக குறையவில்லை. எனவே, பயணிகளின் பாதுகாப்புக்காகவும், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் மூலம் கரோனாவைரஸ் பரவாமல் தடுப்பதற்காகவும் தற்போது இருக்கும் நடைமேடை கட்டண முறை வரும் செப்டம்பர் 16-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x