Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM
தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறி ஏராளமானோர் சாலைகளில் சுற்றுவதால் வாகன சோதனையை மீண்டும் தீவிரப்படுத்த காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று (11-ம் தேதி) முதல் தீவிர வாகன சோதனை நடத்தப்பட உள்ளது. தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம்விதிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 62 நாட்களில் மட்டும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 13.50லட்சம் வழக்குகளும், தனிமனிதஇடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது 71,469 வழக்குகளும்பதிவு செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT