

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம்வழங்கும் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் கரோனா நிவாரண நிதியுதவியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, திமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கரோனா நிவாரண உதவி தொகை வழங் குவது உள்ளிட்ட 5 திட்டங்களில் அவர் கையெழுத்திட்டார்.
இதில், ரேஷன் கடைகள் மூலம் அரிசி மற்றும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதம் முதற் கட்டமாக ரூ.2 ஆயிரமும், அடுத்த மாதம் 2-ம் கட்டமாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித் தார்.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 871 ரேஷன் அட்டைதாரர்கள் கரோனா நிவாரண உதவித்தொகை பெற தகுதி யானவர்கள் என அறிவிக்கப்பட்டது. அவர்களுக்காக முதல் தவணை நிதியாக ரூ.84 கோடியே 77 லட்சத்து 42 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கரோனா நிவாரண உதவித் தொகைக்கான டோக்கன்கள் ரேஷன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டை எண் அடிப்படையில் வீடு, வீடாக சென்று வழங்கினர். ஒரு நாளைக்கு தலா 200 பேருக்கு நிவாரண உதவித்தொகை பெறும் வகையில் டோக்கன்கள் வழங் கப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 698 ரேஷன் கடைகளில் கரோனா நிவாரண உதவித்தொகை வழங் கப்பட்டு வருகிறது. இதுவரை 4 லட்சத்து 13 ஆயிரத்து 956 குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இன்னும், 9 ஆயிரத்து 915 கார்டு களுக்கும் மட்டுமே வழங்கப்பட உள்ளன. இது 97.66 சதவீதமாகும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 509 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 537 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்து 7 ஆயிரத்து 523 அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 3,014 அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிவாரண தொகை வழங்க வேண்டியுள்ளது. இது 99.03 சதவீதமாகும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 614 ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இம்மாவட்டத்தில் 3 லட்சத்து 28 ஆயிரத்து 207 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரை 3 லட்சத்து 21 ஆயிரத்து 824 அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6,383 அட்டைதாரர் களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டியுள்ளது. இது 98.06 சதவீதமாகும்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 98.18 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியுதவி முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள அட்டைதாரர்களுக்கு விரைவில் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என கூட்டுறவு துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட் டத்தில் 1,627 ரேஷன் கடைகள் மூலமாக 7,60,743 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்ட மாக தலா ரூ.2 ஆயிரம் நிவாரண உதவித் தொகை வழங்க ரூ.152 கோடியே 14 லட்சத்து 86 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கீழ்பென்னாத்தூரில் உள்ள ரேஷன் கடையில் கரோனா நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் வழங்கும் பணியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கடந்த சில தினங் களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும், தினசரி 200 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 10 நாட் களாக ரேஷன் கடைகள் மூலமாக நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 7,42,911 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.148 கோடியே 58 லட்சத்து 22 ஆயிரம் கரோனா நிவாரணத் தொகை வழங்கப் பட்டுள்ளது. 97.65 சதவீத குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 17,832 குடும்ப அட்டை தாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடர் கிறது. தி.மலை மாவட்டம் 100 சதவீதம் இலக்கை எட்டும் என்ற நம்பிக்கையில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உள்ளனர்.