மதுரையில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் பட்டாலியன் போலீஸ்

மதுரையில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் பட்டாலியன் போலீஸ்
Updated on
1 min read

மதுரையில் சாலையோர ஆதரவற்றோருக்கு பட்டாலியன் போலீஸார், தினமும் மதிய உணவளிக்கும் திட்டத்தை நேற்று தொடங்கினர்.

தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவின்பேரில், தமிழ்நாடு சிறப்புக்காவல் படை கூடுதல் டிஜிபி ஜெயந்த்முரளி, ஐஜிக்கள் லோகநாதன், தமிழ்ச்சந்திரன் ஆலோசனையின்படி, மதுரை 6-வது பட்டாலியன் கமாண்டன்ட் இளங்கோவன் இதற்கான ஏற்பாட்டை செய்தார்.

மதுரை கோரிப்பாளையம், பனகல் சாலை, அண்ணா பேருந்து நிலையம் பகுதி யில் சுமார் 500 பேருக்கு நேற்று பிற்பகல் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. பட்டாலியன் ஏடிஎஸ்பி முருகேசன் உணவுப் பொட்டலங்களை வாகனத்தில் ஏற்றிச் சென்று நேரில் வழங் கினார்.

இதுகுறித்து ஏடிஎஸ்பி கூறியதாவது:

முழு ஊரடங்கு நீடிக்கும் வரை, மதுரை நகரில் சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

எங்களுக்குள் பணம் வசூலித்து, நாங்களே உணவு சமைத்து பொட்டலங்களாக தயாரித்து, வாகனங்களில் கொண்டு சென்று விநியோகிக்க உள்ளோம்.

தினமும் வெவ்வெறு இடங்களில் சென்று சாலையோரங்களில் பசியோடு இருப்பவர்களுக்கு உணவளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in