Published : 22 May 2021 03:12 AM
Last Updated : 22 May 2021 03:12 AM

மருத்துவக் காப்பீடு எடுப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த கரோனா நோயாளி: ஊழியர்களை எச்சரித்த சிவகங்கை ஆட்சியர்

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர், மருத்துவக் காப்பீடு எடுக்க மதுரை மருத்துவமனையில் இருந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆம்புலன்ஸில் வந்ததால் பர பரப்பு ஏற்பட்டது. அவர்களை வரவழைத்த காப்பீட்டுத் திட்ட ஊழியர்களை ஆட்சியர் பி.மது சூதன் எச்சரித்தார்.

திருப்புவனம் அருகே லாடனேந்தலைச் சேர்ந்தவர் ராஜபிரபு. சில நாட்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் முதல்வர் அறிவித்தபடி தனக்கு முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.

ஆனால், அவருக்கு காப் பீட்டு அட்டை இல்லை.இதையடுத்து ராஜபிரபுவின் உறவினர்கள் சிவகங்கை ஆட் சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மையத்தை அணுகினர். காப்பீட்டு அட்டை பெற, சம்பந்தப்பட்டவரை அழைத்து வர வேண்டுமென காப்பீட்டுத் திட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ராஜபிரபுவை நேற்று மதுரை மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் வசதியுள்ள ஆம்புலன்ஸில் சிவகங்கை ஆட் சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். இதைப் பார்த்ததும் அதிகாரிகள் ஆட்சியருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த ஆட்சியர், ராஜபிரபுவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு ஆம்பு லன்ஸ் ஓட்டுநரிடம் தெரிவித்தார்.

மேலும் இதுபோன்று கரோ னாவால் பாதிக்கப்பட்டவர்களை அலுவலகத்துக்கு வரவழைக்கக் கூடாது என காப்பீட்டுத் திட்ட ஊழி யர்களையும் எச்சரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x