தமிழக மீனவர்கள் 35 பேருக்கு காவல் நீட்டிப்பு

தமிழக மீனவர்கள் 35 பேருக்கு காவல் நீட்டிப்பு
Updated on
1 min read

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர் கள் 35 பேருக்கு ஊர்காவல்துறை நீதிமன்றம் ஜனவரி 4-ம் தேதி வரை காவலை மீண்டும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமே சுவரத்தைச் சேர்ந்த 6 விசைப் படகுகளைக் கைப்பற்றி அதிலி ருந்த 23 மீனவர்களும், புதுக் கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினத்தைச் சேர்ந்த 2 விசைப் படகுகளில் இருந்த 12 மீனவர் களையும் கடந்த நவம்பர் மாதம் இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சிறைபிடித்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்

மீனவர்களின் காவல் புதன் கிழமையுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து 35 தமிழக மீனவர் களும் இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டனர். மீனவர்களை விசா ரித்த நீதிபதி மகேந்திர ராஜா மீண்டும் ஜனவரி 4-ம் தேதி வரையிலும் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத் தாண்டை முன்னிட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டி ருக்கும் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு மீனவர்களின் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டிருப்பது வருத் தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in