கரோனா தொற்றால் பெண் மரணம்: வேதனையில் கணவர், மகன் விஷம் குடித்து தற்கொலை

கரோனா தொற்றால் பெண் மரணம்: வேதனையில் கணவர், மகன் விஷம் குடித்து தற்கொலை
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கரோனா தொற்றுக்கு பெண் உயிரிழந்த வேதனையில், கணவர், மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் கனகராஜன்(57). இவ ரது மனைவி மீனா(45). மகன் மனோஜ்குமார்(26). கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கண்காணிப் பாளராக பணிபுரிந்து வந்த கனக ராஜன், அங்கு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மீனா, கிருஷ்ணகிரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத் தொடர்ந்து அங்கேயே மீனாவுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.

அதன் பின்பு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மாமனார் ஊரான தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நரங்கிப்பட்டிக்கு கனகராஜன், தனது மகன் மனோஜ்குமாருடன் வந்திருந்தார். மீனா இறந்த 30-ம் நாளையொட்டி கடந்த 18-ம் தேதி நரங்கிப்பட்டி குளத்தில் அவரது அஸ்தி கரைக்கப்பட்டது.

இதனிடையே, மீனாவின் மறைவால் வேதனையில் இருந்த கனகராஜனும், மகன் மனோஜ்குமாரும் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து திருவோணம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in