வாணியம்பாடி, ஜோலார்பேட்டை பகுதிகளில் சாராயம் விற்ற 5 பெண்கள் உட்பட 9 பேர் கைது

வாணியம்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையான மாதகடப்பா பகுதியில் சாராய ஊறல்களை அழித்த மதுவிலக்கு தடுப்புப்பிரிவு காவல் துறையினர்.
வாணியம்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையான மாதகடப்பா பகுதியில் சாராய ஊறல்களை அழித்த மதுவிலக்கு தடுப்புப்பிரிவு காவல் துறையினர்.
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமாரின் உத்தரவின் பேரில், வாணியம்பாடி மற்றும் திருப்பத் தூர் மதுவிலக்கு தடுப்புப்பிரிவு காவல் துறையினர் கடந்த 10 நாட்களாக தொடர் சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் 18 பேர் கைது செய்யப் பட்ட நிலையில், கடந்த 2 நாட்களாக நடத்திய சாராய வேட்டையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாணியம்பாடி அடுத்த ஆந்திர எல்லைப்பகுதியான மாத கடப்பா பகுதியில் சாராயம் காய்ச்சி வாணியம்பாடி பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, வாணியம்பாடி மதுவிலக்கு தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமை யில், உதவி ஆய்வாளர் சிவக் குமார் மற்றும் 10 காவலர்கள் அடங்கிய குழுவினர் மாதகடப்பா பகுதியில் கடந்த 2 நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சாராயம் காய்ச்ச தயாராக வைத்திருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை அழித்தனர். அப்போது, பாலன் என்பவர் காவல் துறையினரிடமிருந்து தப்பியோடினார்.

இதையடுத்து, வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம், தும்பேரி, கொடையாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் நடத்திய சோதனையில், பாக்கெட் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த மல்லிகா (36), அம்பிகா (34), கோவிந்தம்மாள் (53), ஆஞ்சி யம்மாள் (56), செல்வி (32), வேலு (37), பார்த்தீபன் (34) ஆகிய 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 330 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல, ஜோலார்பேட்டை ரயில் நிலையம் எதிரேயுள்ள புது ஓட்டல் தெருவில் பாக்கெட்சாராயம் விற்பனை நடைபெறு வதாக வந்த புகாரை தொடர்ந்து, ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் அங்கு சென்று ஓம் சக்தி கோயில் தெருவைச் சேர்ந்த விக்டர் (30) மற்றும் விஜயகுமார் (42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 224 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in