

புதுச்சேரியில் புதிதாக 1,138 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (மே. 4) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 6,820 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 760, காரைக்கால் - 142, ஏனாம் – 172, மாஹே- 64 பேர் என மொத்தம் 1,138 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 16 பேர், காரைக்காலில் ஒருவர் என 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 865 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.37 ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 63 ஆயிரத்து 298 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 1,928 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 8,921 பேரும் என மொத்தமாக 10,849 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 886 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 584 (81.49 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 8 லட்சத்து 18 ஆயிரத்து 210 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 952 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.
மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 245 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.