

முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும் என தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்கு பவர்களை ஊக்குவிக்கும் வகை யில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படுகிறது. விருது பெறு பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப் படும்.
இந்த வகையில் 2015-ம் ஆண்டுக்கு ‘முதல்வர் கணினித் தமிழ் விருது’க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
போட்டிக்குரிய மென் பொருள்கள் 2012,13 மற்றும் 2014-ம் ஆண்டுக்குள் தயாரிக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.
இவ்விருதுக்கு விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை ‘www.tamilvalarchithurai.org’ என்ற தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை- 600008 என்ற முகவரிக்கு இம்மாதம் 31-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044- 2819 0412, 2819 0413 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.