ராமேசுவரம் தோப்பு ஒன்றில் கைப்பற்றப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள். (வலது) மண்டபம் அருகே வேதாளையில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மூட்டைகள்.
ராமேசுவரம் தோப்பு ஒன்றில் கைப்பற்றப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள். (வலது) மண்டபம் அருகே வேதாளையில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மூட்டைகள்.

ராமேசுவரத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 2 டன் கடல் அட்டைகள் பறிமுதல்

Published on

ராமேசுவரத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 2 டன் கடல் அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ராமேசுவரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பெரிய அளவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக்குக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ராமேசுவரம் உதவி காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவாட்ச் தலைமையில் குற்றப்பிரிவு போலீஸார், ராமேசுவரம் எம்ஆர்டி நகர் அருகே வில்லாயுதம் என்பவருக்குச் சொந்தமான தோப்பில் நேற்று சோதனையிட்டனர். அங்கு 1 டன் கடல் அட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டடது. அவற்றை போலீ ஸார் பறிமுதல் செய்தனர்.

இங்கு நடந்த விசாரணையின் அடிப்படையில் தனிப்பிரிவு போலீஸாரும், மண்டபம் போலீஸாரும் மண்டபம் அருகே வேதாளையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பி ஓடினார்.

அந்த வாகனத்தை போலீஸார் சோதனையிட்டபோது 1 டன் கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்தது. சரக்கு வாகனத்தையும், கடல் அட்டை களையும் போலீஸார் பறிமுதல் செய் தனர்.

2 டன் கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.2 கோடி என்றும், இவற்றை இலங்கைக்கு கடத்திச் செல்ல சிலர் முயற்சித்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கடல் அட்டைகள் கடத்தலில் தொடர்புடையவர்களை ராமேசுவரம் போலீஸார் தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in