புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு: புதிதாக 237 பேர் பாதிப்பு

புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு: புதிதாக 237 பேர் பாதிப்பு
Updated on
1 min read

புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 237 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று(ஏப். 6) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,018 பேருக்குப் பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 145 பேருக்கும், காரைக்காலில் 68 பேருக்கும், ஏனாமில் 9 பேருக்கும், மாஹேவில் 15 பேருக்கும் என மொத்தம் 237 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 426 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,347 பேரும் என மொத்தம் 1,773 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், காரைக்கால் கென்னடியார் தெருவைச் சேர்ந்த 87 வயது மூதாட்டி காரைக்கால் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 686 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.60 ஆக உள்ளது.

இன்று 139 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 317 (94.25) ஆக உள்ளது. இதுவரை 6 லட்சத்து 85 ஆயிரத்து 192 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 6 லட்சத்து 30 ஆயிரத்து 675 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

மாநிலத்தில் 28 ஆயிரத்து 286 சுகாதாரப் பணியாளர்கள், 16 ஆயிரத்து 275 முன்களப் பணியாளர்கள், 37 ஆயிரத்து 717 பொதுமக்கள் என 82 ஆயிரத்து 278 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in