ஒரே நாளில் 5 தேர்கள் பவனி: திருவண்ணாமலையில் மகா தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஒரே நாளில் 5 தேர்கள் பவனி: திருவண்ணாமலையில் மகா தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Updated on
1 min read

திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயிலில் கொட்டும் மழை யில் மகா தேரோட்டம் வெகு சிறப் பாக நேற்று நடைபெற்றது. ஒரே நாளில் 5 தேர்கள் பவனி வந்ததை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, கொடியேற்றத்துடன் கடந்த 16-ம் தேதி தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ‘மகா தேரோட்டம்’ நேற்று நடை பெற்றது. பஞ்ச ரதங்களுக்கு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. முதலில், விநாயகர் தேர் காலை 6.45 மணிக்கு புறப்பட்டது. அந்த தேர், நிலைக்கு வந்து சேர்ந்ததும் முருகன் தேர் புறப்பட்டுச் சென்றது. மாடவீதியில் சுமார் 3 மணி நேரம் வலம் வந்து நிலையை அடைந்தது. அதன்பிறகு, உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் தேரோட்டம் நடைபெற்றது. மதியம் 2.03 மணிக்கு பெரிய தேர் புறப் பட்டது. மாட வீதியான தேரடி வீதி, திருவூடல் தெரு, பே கோபுர வீதி வழியாக பவனி வந்து, 7 மணி நேரத்துக்குப் பிறகு நிலையை சென்றடைந்தது.

பின்னர், பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் பராசக்தி அம்மன் தேரோட்டமும் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் நடைபெற்றது.

மகா தேரோட்டம் நடைபெற்ற போது கனமழை பெய்தது. கொட்டும் மழையில் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று முழக்கமிட்டு ஒவ்வொரு தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். காலை யில் தொடங்கிய மகா தேரோட்டம், நள்ளிரவில் நிறைவு பெற்றது.

தேரோட்டத்தின்போது குழந்தை களை கரும்புத் தொட்டிலில் சுமந்த பக்தர்கள், மாட வீதியை சுற்றி வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். ஓரேநாளில், 5 தேர்கள் பவனி வருவது கூடுதல் சிறப்பாகும். மகா தேரோட்டத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து அண்ணா மலை கோயிலில் 25-ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in