தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கரோனா தொற்று- சென்னையில் 294 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கரோனா தொற்று- சென்னையில் 294 பேருக்கு பாதிப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் இன்று 759 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 294 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறி்த்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 188 தனியார் ஆய்வகங்கள் என 257 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,870.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,79,66,115.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 67,087 .

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,59,726 .

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 759 .

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 294.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,19,393 பேர். பெண்கள் 3,40,298பேர். மூன்றாம் பாலினத்தவர் 35 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 449 பேர். பெண்கள் 310 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 547 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,42,309 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 4 பேர் உயிரிழந்தார். இருவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவார். இருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்.

இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,547 ஆக உள்ளது.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் மூவர் இன்று உயிரிழந்தார். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் யாரும் இல்லை.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in