புதுச்சேரியில் 40 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு: புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி

புதுச்சேரியில் 40 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு: புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி
Updated on
1 min read

புதுச்சேரியில் கரோனா தொற்று 40 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (மார்ச் 12) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 1,202 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 12 பேருக்கும், காரைக்காலில் 12 பேருக்கும், மாஹேவில் 6 பேருக்கும் என 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 984 ஆக உயர்ந்துள்ளது. இதில் மருத்துவமனைகளில் 87 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 99 பேரும் என 186 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உயிரிழப்பு ஏதும் இல்லை. இறப்பு எண்ணிக்கை 670 ஆகவும், இறப்பு விகிதம் 1.68 ஆகவும் உள்ளது. இன்று 20 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 128 (97.86 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 6 லட்சத்து 44 ஆயிரத்து 328 கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 5 லட்சத்து 98 ஆயிரத்து 824 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

புதுச்சேரியில் 11 ஆயிரத்து 893 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும், 4 ஆயிரத்து 91 முன்களப் பணியாளர்களுக்கும், 7 ஆயிரத்து 24 பொதுமக்களுக்கும் என 23 ஆயிரத்து 8 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in