தமிழகத்தில் இன்று 543 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 225 பேருக்கு பாதிப்பு: 562 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று 543 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 225 பேருக்கு பாதிப்பு: 562 பேர் குணமடைந்தனர்
Updated on
1 min read


தமிழகத்தில் இன்று 543 பேருக்குக் கரோனா உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 8,53,992.

சென்னையில் 225 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.

* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 188 தனியார் ஆய்வகங்கள் என 257 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3954

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,7419485.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 54676.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,53,992.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 543.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 225.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,15,972 பேர். பெண்கள் 3,37,985 பேர். மூன்றாம் பாலினத்தவர் 35 பேர்.

* இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 328 பேர். பெண்கள் 215 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 562 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,37525 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மூவர் அரசு மருத்துவமனையில் இறந்தனர். தனியார் மருத்துவமனையில் 2 பேர் இறந்தனர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,513 ஆக உள்ளது.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in