

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறினார்.
ஓசூரில் பாஜக சார்பில் ‘வெற்றிக் கொடியை ஏந்தி வெல்வோம் தமிழகம்’ என்ற தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி மற்றும் நடிகை காயத்ரி ரகுராம், பாஜக மாநில துணைச்செயலாளர் நரேந்திரன், மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவிசெய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறும். அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று அதிமுகமீண்டும் ஆட்சிக்கு வரும். தமிழகத்தில் பொதுமக்கள் பாஜகவுக்கு அளிக்கும் வரவேற்பை பார்க்கும்போது பாஜக பலம் கூடியுள்ளதாக தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் நல்ல திட்டங்கள், தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் வழங்கும் முன்னுரிமை பிரதமரை தமிழ்நாட்டின் உண்மையான நண்பனாக மாற்றிஉள்ளது.
இதுவே எங்களுக்கு வெற்றியைபெற்றுத் தரும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக்கூட்டணி தலைமையிலான அரசு அமைவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.