

நாடாளுமன்றம் கட்ட பணம் தேவைப்படுவதால் மக்கள் மீது வரிகளைச் சுமத்துகின்றனர் என சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரம் குற்றம்சாட்டினார்.
சிவகங்கை மாவட்டம், காரைக் குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாஜக சாயல் அல்லாத ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும் என்பதற்காக ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். காங்கிரஸில் சில நடைமுறை மாற்றங்கள் வரவேண்டும் என விரும்புகின்றனர். உட்கட்சித் தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெ டுக்க வேண்டும் என்ற கருத்துக்கு உடன்படுகிறேன்.
மந்தமான பொருளாதாரத்தால் பணப்புழக்கம் இல்லை. அதனால் பறக்கும் படையால் பணத்தைப் பிடிக்க முடியவில்லை. குழப்பமான ஜிஎஸ்டியால் அரசுக்கு வருமானம் இல்லை. மேலும் நாடாளுமன்றம் கட்ட பணம் தேவைப்படுகிறது. அதற்காக பெட்ரோல், டீசல், எரிவாயு மூலம் மக்கள் மீது வரிகளைச் சுமத்துகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட மகளிர், இளைஞர்கள், சிறுபான்மையினருக்கு முக்கியத் துவம் கொடுக்க வேண்டும். சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் கட்சி காங்கிரஸ் என்றால், தேர்தலில் சிறுபான்மையி னரும் போட்டியிட வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.
பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலில் வென்ற 9 பேரில் ஒருவர் மட்டுமே பெண்.
இதுகுறித்து மேலிடத்தில் பேச இருக்கிறேன். மேலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களின் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான முடிவு கிடைக் கும். தமிழகத்தில் திமுக- அதிமுக கூட்டணிக்குத்தான் நேரடி போட்டி
பாஜகவுக்கு செல்வாக்கு இருந்தால் மக்களைச் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதை விடுத்து எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியைக் கலைப்பது ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல.
பெருளாதார வீழ்ச்சி, சிறுபான் மையினருக்கு ஏற்பட்டுள்ள அச்சம், தமிழ் உணர்வுகளை மதிக்காத பாஜகவிடம் ஒத்துப்போகும் அதிமுக அரசு, பத்தாண்டு காலமாக தொழில் வளர்ச்சி இல்லாதது, அனைத்துத்துறைகளிலும் ஊழல் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துக் கூறி திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.