தா.பாண்டியன் மறைவு: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை இரங்கல் 

தா.பாண்டியன் மறைவு: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை இரங்கல் 
Updated on
1 min read

தா.பாண்டியன் மறைவுக்கு தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 88.

தா.பா.மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தி:

“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in