

புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கட்டணமில்லா கல்வி மற்றும் அம்பேத்கர் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4 லட்சத்தை ரூ.5 லட்சமாக உயர்த்தியது ஆகிய திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதற்காக அனைத்து தலித் பழங்குடியின இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசுக்கு நன்றி பாராட்டு நிகழ்ச்சி தவளக்குப்பத்தில் நேற்று நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ நீல.கங்காதரன் தலைமை தாங்கினார். அகில இந்திய தலித் உரிமை இயக்கம் ராமமூர்த்தி வரவேற்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார்.
அப்போது முதல்வர் பேசியது:
உயர் சமூகத்தைச் சேர்ந்தவர் கள், வசதி உள்ளவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கும். ஆனால் ஆதிதிராவிடர், பிற்படுத் தப்பட்டோர், மலைவாழ் மக்கள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றனர். நம்மை விலைக்கு வாங்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். நம்மை யாரும் விலைக்கு வாங்க முடியாது. அது பலிக்காது.
இந்த இரண்டு திட்டங்களையும் கொண்டுவர நானும், அமைச்சர் கந்தசாமியும் எடுத்துக் கொண்ட முயற்சி எல்லோருக்கும் தெரியும். மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான கோப்பு தயார் செய்து ஆளுநருக்கு அனுப்பினோம். ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் எந்த மாநிலத்தில் இத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றுகேள்வி எழுப்பினார். நான் அவருக்கு சொன்னது, புதுச்சேரி மாநி லத்தில் இருக்கின்ற ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த பிள்ளை கள் மருத்துவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், பொறியாளர்க ளாகவும் வர வேண்டும். யாரையும் நம்பி இருக்கக்கூடாது. சொந்த காலில் நிற்க வேண்டும் என்று கூறி மீண்டும் கோப்பை ஆளுநருக்கு அனுப்பினோம். ஆனால் ஆளுநர் இந்த திட்டத்தை கொண்டு வந் தால் அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்ற காரணத்தால் மீண் டும் அந்த கோப்பை திருப்பி அனுப்பினார். இந்த காலக்கட்டத்தில் 3 நாட் கள் போராட்டம் நடத்தினோம். அமைச்சர் கந்தசாமியும் 10 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டங்களின் விளைவாக நாம் வெற்றி பெற்றோம்.
இந்தியாவில் எந்த மாநிலத் திலும் இந்த திட்டம் இல்லை. புதுச் சேரி மாநிலம் முன்னோடியாக இருக்கிறது. புதுச்சேரியை பார்த்துமற்ற மாநிலத்தினர் கண்டிப்பாக இந்த கல்வித் திட்டத்தை நிறைவேற் றியே ஆக வேண்டும். பட்ஜெட்டில் இருந்து 16 சதவீத நிதியை ஆதிதிராவிடர் சமுதாயத்துக்கு செலவிட நாங்கள் சட்டவரையறை தயார் செய்து அமைச்சரவையில் முடிவுசெய்தோம். அதனை சட்டப் பேர வையில் கண்டிப்பாக நிறை வேற்றுவோம். ஒருசிலர் சமூகத்தின் பெயரை சொல்லியே வாழ்ந்து கொண்டிருகின்றனர். நாங்கள் உங்களிடம் கேட்பது, 'நாங்கள் உங்களோடு இருக்கிறோம். நீங்களும் எங்களோடு இருக்க வேண்டும் என்பது தான்' என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கந்த சாமி, அரசு கொறடா அனந்தராமன், விஜயவேணி எம்எல்ஏ மற்றும் பல்வேறு கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.