சிறப்பு நீதிமன்றங்களில் என்னென்ன வழக்குகள் விசாரிக்கலாம்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சிறப்பு நீதிமன்றங்களில் என்னென்ன வழக்குகள் விசாரிக்கலாம்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சிறப்பு நீதிமன்றங்களில் எம்.பி., எம்எல்ஏ.,க்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை மட்டுமே விசாரிக்கவேண்டும். மற்றவர்கள், அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எம்.பி., எம்எல்ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை மட்டுமே சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டுமெனவும், மற்றவர்கள் மீது அவர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரிக்க கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எம்.பி, எம்எல்ஏ.,க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், அவற்றை கண்காணிப்பது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில், தானாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணைக்கு எடுத்து வழக்கை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இதில் குற்றம் மற்றும் அவதூறு வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டதாக உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, இந்த சிறப்பு நீதிமன்றங்களில் எம்.பி. மற்றும் எம்எல்ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும், மற்றவர்கள், அவர்கள் மீது தொடரும் வழக்குகளோ அல்லது மற்றவர்கள் மீது இவர்கள் தொடர்ந்த வழக்குகளையோ விசாரிக்கக் கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in