புதுச்சேரியில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று: உயிரிழப்பு இல்லை

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்
Updated on
1 min read

புதுச்சேரியில் இன்று புதிதாக 10 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜன. 02) தெரிவித்திருப்பதாவது:

"புதுச்சேரி மாநிலத்தில் 2,378 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 6 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும் பேருக்கும், மாஹேவில் 3 பேருக்கும் என மொத்தம் 10 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் இன்றைய தினம் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.

இன்று உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 633 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் நீடிக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை 38 ஆயிரத்து 174 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் மருத்துவமனைகளில் 141 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 205 பேரும் என 346 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 195 (97.44 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 4 லட்சத்து 91 ஆயிரத்து 519 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 4 லட்சத்து 48 ஆயிரத்து 947 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in