

புதுச்சேரியில் இன்று புதிதாக 42 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச.3) வெளியிட்டுள்ள தகவல்:
''புதுச்சேரி மாநிலத்தில் 2,820 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் புதுச்சேரியில் 15 பேருக்கும், காரைக்காலில் 4 பேருக்கும், மாஹேவில் 23 பேருக்கும் என மொத்தம் 42 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் இன்று யாருக்கும் தொற்று இல்லை.
மேலும், புதுச்சேரி கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 45 வயதுப் பெண் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 613 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.65 ஆக இருக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 119 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 165 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 279 பேரும் என மொத்தம் 444 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 62 ஆக (97.15 சதவீதம்) அதிகரித்துள்ளது. இதுவரை 4 லட்சத்து 12 ஆயிரத்து 72 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 672 பரிசோதனைகள் நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளன.''
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.