நாமக்கல் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ள மருத்துவக் கழிவுகள்: சுகாதார கேடு ஏற்படுவதால் விரைந்து அகற்றக் கோரிக்கை

நாமக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகளை விரைந்து அகற்ற வேண்டும், என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மோகனூர் சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனை யில் சேகரமாகும் பல்வேறு மருத்துவக் கழிவுகள் மருத்துவமனை பின்புறம் பிரேத பரிசோதனை கூடம் அருகே குவித்து வைக்கப்படுகிறது. மருத்துவக் கழிவுகளை தனியார் நிறுவனத்தினர் அகற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனினும், சரிவர மருத்துவக் கழிவுகளை தனியார் நிறுவனத்தினர் அகற்றுவதில்லை என, புகார் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் மருத்துவக் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பச்சிளங் குழந்தைகள் வார்டு அதே பகுதியில் அமைந்துள்ளதால் மருத்துவக் கழிவுகளை அவ்வப்போது அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறுகையில், நகராட்சி நிர்வாகத்தினர் மருத்துவமனையில் சேகரமாகவும் கழிவுகளை அகற்ற வேண்டும்.

அதேபோல் மருத்துவக் கழிவுகளை அகற்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தினர் நாமக்கல் அரசு மருத்துவமனை உட்பட்ட 7 மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகளை சேகரித்து அகற்றுகின்றனர், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in