வாயலூர் பாலாற்று தடுப்பணையில் இருந்து விநாடிக்கு 1,750 கன அடி உபரிநீர் கடலில் கலந்து வருகிறது

வள்ளிபுரம் பாலாற்று தடுப்பணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் வெளியேறி வருகிறது.
வள்ளிபுரம் பாலாற்று தடுப்பணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் வெளியேறி வருகிறது.
Updated on
1 min read

திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், வாயலூர் பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி விநாடிக்கு 1,750 கன அடி உபரிநீர் கடலில் கலந்துவருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலூரிலும், திருக்கழுக்குன்றம் அடுத்த வள்ளிபுரத்திலும் பாலாற்றின் குறுக்கேதடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், தடுப்பணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு, நேற்று முன்தினம்தடுப்பணைகள் முழு கொள்ளளவை எட்டின. மேலும், உபரிநீர்வெளியேறி கடலில் கலந்து வருகிறது.

இதன்மூலம், பாலாற்றில் இருந்து விநாடிக்கு 1,750 கன அடி அளவில் உபரிநீர் வெளியேறி கடலில் கலந்து வருவதாக, பாலாற்று கீழ் வடிநிலக் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், வள்ளிபுரம் பாலாற்று தடுப்பணையும் நிரம்பி விநாடிக்கு 1,300 கன அடி உபரிநீர் வெளியேறி வருகிறது. வாயலூர் தடுப்பணை மூலம் பாலாற்று படுகையில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களான புதுப்பட்டினம், கல்பாக்கம், பனங்காட்டுச்சேரி, பூந்தண்டலம், கொந்தகாரிகுப்பம், ஆயப்பாக்கம், நல்லாத்தூர், வெங்கப்பாக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டகிராமங்கள் மற்றும்வள்ளிபுரம் தடுப்பணையால் ஆனூர், எலுமிச்சைபட்டு, நீலமங்களம், ஈசூர், பூதூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கரையோர கிராமங்களில் உள்ள விளை நிலங்களின் பாசன தேவையும் பூர்த்தியாகும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in