தாழையூத்து பெண் ஊராட்சித் தலைவரை கொல்ல முயன்ற வழக்கு: 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை உறுதி

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
தாழையூத்து பெண் ஊராட்சித் தலைவரை கொல்ல முயன்ற வழக்கு: 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை உறுதி
Updated on
1 min read

மதுரை: ​திருநெல்​வேலி மாவட்​டம் தாழையூத்து பெண் ஊராட்​சித் தலை​வரை அரி​வாளால் வெட்​டிக் கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​டது தொடர்​பான வழக்​கில், ஊராட்சி உறுப்​பினர் உள்​ளிட்ட 6 பேரின் இரட்டை ஆயுள் சிறைத் தண்​டனையை உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உறுதி செய்து உத்​தர​விட்​டது.

தாழையூத்து ஊராட்​சித் தலை​வ​ராக 2006 முதல் 2011 வரை இருந்​தவர் கிருஷ்ணவேணி. பட்​டியலினத்​தைச் சேர்ந்த இவரை ஊராட்சி உறுப்​பினர் சுப்பு என்ற சுப்​பிரமணி​யன் சாதிரீ​தி​யாக துன்​புறுத்தி வந்​துள்​ளார். மேலும், கழிப்​பறை கட்​டும் விவ​காரத்​தில் இவர்​களிடையே தகராறு ஏற்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், 2011 ஜூன் 13-ம் தேதி கிருஷ்ணவேணியை ஒரு கும்​பல் அரி​வாளால் வெட்​டித் தாக்​கி​விட்டு தப்​பியது. இதில் கிருஷ்ணவேணி​யின் கை விரல்​கள் துண்​டான நிலை​யில், சென்னை அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்​தார்.

இது தொடர்​பாக 9 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். இந்த வழக்கை நெல்லை வன்​கொடுமை வழக்​கு​களுக்​கான சிறப்பு நீதி​மன்​றம் விசா​ரித்​தது. வழக்கு நடை​பெற்​றுக் கொண்​டிருந்​த​போதே ஒரு​வர் உயி​ரிழந்​தார். விசா​ரணை முடி​வில், சுப்பு என்ற சுப்​பிரமணி​யன், சுல்​தான் மைதீன், கார்த்​திக், ஜேக்​கப், பிர​வீன்​ராஜ், விஜய​ராமமூர்த்தி ஆகிய 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்​டனை​யும், ரூ.7.60 லட்​சம் அபராத​மும் விதித்து 2024 அக். 8-ம் தேதி நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது. வழக்​கி​லிருந்து 2 பேர் விடுவிக்​கப்​பட்​டனர்.

இதையடுத்​து, தண்​டனையை ரத்து செய்​யக் கோரி 6 பேரும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீடு செய்​தனர். இந்த மனு நீதிப​தி​கள் ஜி.கே.இளந்​திரையன், ஆர்​.பூர்​ணிமா அமர்வு முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தது. கிருஷ்ணவேணி தரப்​பில் வழக்​கறிஞர் திரு​முரு​கன் வாதிடும்​போது, “மனு​தா​ரர்​கள் கொடூர தாக்​குதலில் ஈடு​பட்​டுள்​ளனர். இதனால் பாதிக்​கப்​பட்ட கிருஷ்ணவேணி தற்​போது 75 சதவீத மாற்​றுத் திற​னாளி​யாக உள்​ளார்” என்​றார்.

இதையடுத்​து, மனு​தா​ரர்​கள் 6 பேருக்​கும் விசா​ரணை நீதி​மன்​றம் வழங்​கிய இரட்டை ஆயுள் சிறைத் தண்​டனையை உறுதி செய்​தும், மேல்​முறை​யீட்டு மனுவை தள்​ளு​படி செய்​தும் நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

தாழையூத்து பெண் ஊராட்சித் தலைவரை கொல்ல முயன்ற வழக்கு: 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை உறுதி
14 அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்: நூற்றுக்கணக்கான வீரர்கள் பலியானதாக தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in