மானாமதுரை இளைஞர் மரணத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 6 போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு

சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தகவல்
ஆகாஷ் டெலிஷன்

ஆகாஷ் டெலிஷன்

Updated on
2 min read

மானாமதுரை: ​மா​னாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிஷன் மரணத்​தில் காவல் ஆய்​வாளர் உள்பட 6 போலீ​ஸார் மீது கொலை வழக்​குப் பதிந்​துள்​ள​தாக சிபிசிஐடி குற்​றப்​பத்​திரி​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிருஷ்ண ராஜபுரத்​தைச் சேர்ந்​தவர் ஆகாஷ் டெலிஷன். கடந்த மார்ச் 5-ம் தேதி இரவு மானாமதுரை சீயோன் நகரில் ஏற்​பட்ட தகராறில் இரு​வரை வெட்​டிய வழக்​கில் ஆகாஷ் டெலிஷனை போலீ​ஸார் கைது செய்​தனர். அப்​போது காயமடைந்த அவரை மதுரை அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு அவர் உயி​ரிழந்​தார்.

இதற்​கு, கைது செய்​யச் சென்​ற​போது தப்​பிக்க முயன்று பாலத்​திலிருந்து கீழே விழுந்​த​தில் அவருக்கு காயம் ஏற்​பட்​ட​தாக​வும், மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​த​தாக​வும் போலீஸ் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

ஆனால், போலீ​ஸார் தாக்​கிய​தில்​தான் உயி​ரிழந்​தாகக் கூறி அவரது உறவினர்​கள் தொடர்ந்து போராட்​டம் நடத்​தினர். மேலும், பிரேதப் பரிசோதனை​யில் 28 இடங்​களில் காயங்​கள் இருப்​பதும் தெரிய​வந்​தது. காவல் ஆய்​வாளர் திலீபன் உள்பட 6 போலீ​ஸார் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். தொடர்ந்​து, சிபிசிஐடி போலீ​ஸார் கொலை மற்​றும் வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தில் வழக்கு பதிந்து விசா​ரித்து வந்​தனர். ஆனால், குற்​ற​வாளி​கள் குறித்த விவரம் தெரி​யாமல் இருந்​தது.

இந்​நிலை​யில், சிபிசிஐடி போலீ​ஸார் மதுரை நீதி​மன்​றத்​தில் கடந்த ஜூன் 18-ம் தேதி குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​தனர். அதன் நகல் தற்​போது ஆகாஷ் டெலிஷன் குடும்​பத்​தினருக்கு கிடைத்​துள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: ஆகாஷ் டெலிஷனை போலீ​ஸார் மானாமதுரை அருகே யூக்​கலிப்​டஸ் மரங்​கள் நிறைந்த காட்​டுப்​பகு​திக்கு அழைத்​துச் சென்று இரும்​புக் கம்​பி​யால் தாக்​கி​யுள்​ளனர்.

அவரது வலது காலில் முழங்​காலுக்கு கீழ்​பகுதி மற்​றும் கணுக்​காலுக்கு மேல்​பகு​தி​யில் தாக்​கிய​தில் எலும்பு முறிவு ஏற்​பட்​டது. இதனால், ரத்​தக்​குழா​யில் கொழுப்பு அடைப்பு ஏற்​பட்டு ஆகாஷ்டெலிஷன் உயி​ரிழந்​தார். மேலும், தாக்​கிய இரும்​புக் கம்​பியை மறைத்து வைத்​து​விட்டு போலீ​ஸாரிட​மிருந்து தப்​பிச் சென்​ற​போது கீழே விழுந்து காயமடைந்​த​தாக தவறான தகவலை போலீ​ஸார் பதிவு செய்​துள்​ளனர்.

இந்த வழக்​கில் காவல் ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்​வாளர் குகன், காவலர்​கள் மகேந்​திரன், காளீஸ்​வரன், தெய்​வேந்​திரன், பழனியப்​பன் ஆகிய 6 பேர் குற்​றம்சாட்​டப்​பட்​ட​வர்​களாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்டு 68 நாட்​களுக்​குப் பிறகு நகல் வழங்​கிய​தாக​வும், அதி​லும் 12 பக்​கங்​கள் மட்​டுமே இருப்​ப​தாக​வும், விசா​ரணை​யின்​போது பதிவு செய்​யப்​பட்ட அனைத்து ஆவணங்​களும் முழு​மை​யாக வழங்​க​வில்லை என்​றும் ஆகாஷ் டெலிஷன் குடும்​பத்​தினர் குற்​றம்​சாட்​டினர்.

இதுகுறித்து ஆகாஷ் டெலிஷனின் தாயார் ஆனந்தி கூறியது: முதலில் பாலத்​திலிருந்து குதித்​த​தால்​தான் கால் உடைந்​ததாக போலீ​ஸார் பொய்​ தகவலைத் தெரி​வித்​தனர். தற்​போது இரும்​புக் கம்​பி​யால் தாக்​கிய​தில்​தான் என் மகன் உயி​ரிழந்​தது தெரிய​வந்​துள்​ளது. இந்​தச் சம்​பவத்​தில் 16 பேர் மீது புகார் அளித்​தோம். ஆனால், 6 பேரை மட்​டுமே வழக்​கில் சேர்த்​துள்​ளனர். மற்​றவர்​கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். என் மகனைத் தாக்​கிய அனை​வருக்​கும் சட்​டப்​படி தண்​டனை வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>ஆகாஷ் டெலிஷன்</p></div>
மேட்டூரில் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க திட்டம்: முதல்வர் விஜய் வருகைக்கு முன்னேற்பாடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in