விநாயகர் சிலைக்கு அணிவித்த ரூ.10 ஆயிரம் பண மாலை திருட்டு: 6 பேர் கைது

விநாயகர் சிலைக்கு அணிவித்த ரூ.10 ஆயிரம் பண மாலை திருட்டு: 6 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: ​விநாயகர் சிலைக்கு அணி​வித்த 10 ஆயிரம் ரூபாய் பண மாலையை திருடிச் சென்​ற​தாக 4 இளஞ்​சிறார்​கள் உட்பட 6 பேரை ஆர்​.கே.நகர் போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

தண்​டை​யார்​பேட்டை நேதாஜி நகர் 3-வது தெரு​வைச் சேர்ந்​தவர் விக்​னேஷ் வரன் (33). இவர் ஆண்​டு​தோறும் விநாயகர் சதுர்த்​தியை முன்​னிட்​டு, விநாயகர் சிலை வைத்து வழி​பாடு நடத்தி வரு​கிறார். அதன்​படி, கடந்த 13-ம் தேதி விநாயகர் சிலை வைத்து வழி​பாடு நடத்​தி​னார்.

தொடர்ந்​து, கடந்த 15-ம் தேதி விநாயகர் சிலைக்கு 100 ரூபாய் நோட்​டு​களை கொண்டு தயாரிக்​கப்​பட்ட ரூ.10 ஆயிரம் பண மாலையை அணி​வித்​தார். பின்​னர் இரவு வரை விநாயகர் சிலை அரு​கில் இருந்த விக்​னேஷ்வரன், அதன்​பிறகு வீட்​டுக்கு சென்​றார்.

மறு​நாள் 16-ம் தேதி அதி​காலை​யில் விநாயகர் சிலையை பார்த்​த​போது, சிலைக்கு அணி​வித்​திருந்த ரூ.10 ஆயிரம் பண மாலை காணா​மல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்​தார்.

இதுகுறித்து அவர், ஆர்​.கே.நகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். போலீ​ஸார் அப்​பகு​தி​யில் பொருத்​தப்​பட்​டிருந்த சி.சி.டி.​வி. கேமரா பதிவு​களை​யும் ஆய்வு செய்​தனர்.

அதனடிப்​படை​யில், திருட்​டில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படும் தண்​டை​யார்​பேட்டை நேதாஜி நகர் 3-வது தெரு​வைச் சேர்ந்த ரூபன் (20), பட்​டேல் நகர் பகு​தி ​யைச் சேர்ந்த சந்​தோஷ் (19) ஆகிய 2 பேரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​யப்​பட்​டனர்.

இவர்​களு​டன் சேர்ந்து திருட்​டில் ஈடு​பட்​ட​தாக 16 மற்​றும் 17 வயதுடைய மேலும் 4 சிறு​வர்​களை​யும் கைது செய்​தனர்​. தொடர்ந்​து வி​சா​ரணை நடை​பெறு​கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in