புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீழாத்தூரில் தார் சாலையில் முளைத்த புற்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீழாத்தூரில் கடந்த வாரம் போடப்பட்ட தார் சாலையில் முளைத்த புற்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீழாத்தூரில் கடந்த வாரம் போடப்பட்ட தார் சாலையில் முளைத்த புற்கள்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீழாத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டருக்குக் குடியிருப்புக்குள் ரூ.30 லட்சம் மதிப்பில் கடந்த வாரம் தார் சாலை அமைக்கப்பட்டது.

அதில், தரமில்லாமல் அமைக்கப்பட்டதால் சாலையில் பல்வேறு இடங்களில் புற்கள் முளைத்தன. இதை சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

பின்னர், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து சரி செய்ய உத்தரவிட்டனர். அதன்படி சாலை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து அலுவலர்கள் கூறியபோது, "தரமின்றி அமைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து சாலையின் தரம் குறித்து பொறியாளர்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதுபோன்ற இடங்களில் மீண்டும் தார்கலவையிட்டு சாலையை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in