

புதுச்சேரியில் இன்று புதிதாக 386 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 82.70 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக். 8) கூறும்போது, "புதுச்சேரியில் 4,669 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி - 281, காரைக்கால் - 39, ஏனாம் - 14, மாஹே- 52 என மொத்தம் 386 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 2 பேர், காரைக்காலில் 3 பேர் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 556 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.82 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 30 ஆயிரத்து 539 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,356 பேர், காரைக்காலில் 463 பேர், ஏனாமில் 67 பேர், மாஹேவில் 140 பேர் என 3,026 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் புதுச்சேரியில் 1,448 பேர், காரைக்காலில் 85 பேர், ஏனாமில் 76 பேர், மாஹேவில் 92 பேர் என 1,701 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,727 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று ஒரே நாளில் 326 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 256 (82.70) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரத்து 349 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 1 லட்சத்து 86 ஆயிரத்து 349 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.