விருதுநகர் கூடுதல் எஸ்.பி, நகராட்சி மேலாளர் உள்பட 149 பேருக்கு கரோனா தொற்று: நகராட்சி அலுவலகம் மூடல்

விருதுநகர் கூடுதல் எஸ்.பி, நகராட்சி மேலாளர் உள்பட 149 பேருக்கு கரோனா தொற்று: நகராட்சி அலுவலகம் மூடல்
Updated on
1 min read

விருதுநகரில் கூடுதல் எஸ்.பி, நகராட்சி மேலாளர் உள்பட இன்று ஒரே நாளில் 149 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

விருதுநகர் நகராட்சி அலுவலகமும் மூடப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, மதுரையைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 5 மருத்துவர்கள், 15 செலிவியர்கள், 30க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் உள்பட பலர் கரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமையிட கூடுதல் எஸ்.பி. குத்தாலிங்கம் மற்றும் விருதநகர் நகராட்சி அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றி வரும் பெண் ஒருவருக்கும் அலுவலர் ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதோடு, விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் இன்று ஒரே நாளில் 149 பேர் கரோனை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,722 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் தொடர்ந்து 1,909 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in