என்எல்சி விபத்தில் உயிரிழந்தோருக்கு மத்திய அரசும் நிதியுதவி தர வேண்டும்: உள்துறை அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

என்எல்சி விபத்தில் உயிரிழந்தோருக்கு மத்திய அரசும் நிதியுதவி தர வேண்டும்: உள்துறை அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை
Updated on
1 min read

நெய்வேலி எல்எல்சி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்க ளுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் பழனிசாமி, இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

பலத்த காயமடைந்தவர்க ளுக்கு தலா ரூ.1 லட்சம், கா யமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்னைத் தொடர்புகொண்டு என்எல்சி விபத்து குறித்து விசாரித்தபோது, மாநில அரசு சார்பாக செய்ய வேண்டிய உதவிகளை செய்து வருகிறோம் என்று நான் கூறினேன். மேலும், விபத் தில் இறந்தவர்களுக்கும், பாதிக்கப் பட்டவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் தேவையான நிதியுத வியை வழங்கிட கோரிக்கை வைத்துள்ளேன்.

இவ்வாறு முதல்வர் தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in