பெண்களை ஏமாற்றி மோசடி: காசி மீதான 6 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்

காசி
காசி
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி (26) என் பவர் பல பெண்களிடம் காதலிப்பது போல், நெருங்கிப் பழகி வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இதுதொடர்பாக பெண் மருத்துவர் உட்பட பல பெண்கள் அளித்த புகாரின் பேரில் குண் டர் சட்டத்தில் காசி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பாரபட்சமின்றி விசாரணை நடைபெற இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பெண்கள் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து காசி மீதான போக்ஸோ, கந்துவட்டி உட்பட 6 வழக்குகளையும் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்ற தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து காசி மீதான வழக்குகள் தொடர்பாக குமரி மாவட்ட போலீஸார் திரட்டிய அனைத்து ஆதாரங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in