சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Updated on
1 min read

சென்னை பல்கலைக்கழக மாணவர் கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகம் துறையின் தலைவராக இருப்பவர் கோட்டீஸ்வர பிரசாத். இவரை சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தின் வேறொரு பொறுப்புக்கு நிர்வாகம் மாற்றியது. அதைத் தொடர்ந்து அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகம் துறையின் தலைவராக பேராசிரியர் ஆர்.மணிவண்ணன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சில நிர்வாக காரணங்களுக்காக கோட்டீஸ்வர பிரசாத் மீண்டும் துறை தலைவர் பதவிக்கு மாற்றப்பட்டார். இதனால் மணிவண்ணனை துறை தலைவர் பதவியில் இருந்து பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியது.

இதற்கு அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகம் துறை மாணவர்கள் கண்டனம் தெரிவித்து கடந்த 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பேராசிரியர் மணிவண்ணனை மீண்டும் துறை தலைவராக நியமிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

நேற்று மாலையிலும் பல்கலைக்கழக வளாகத்தில் கூடிய மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அங்கேயே அமர்ந்து நேற்று இரவுவரை தொடர்ந்து போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்துக்கு சில பேராசிரியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in