ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 2 மாதங்களுக்கு பின் தோவாளை மலர் சந்தை மீண்டும் திறப்பு: கேரள வியாபாரிகள் வராததால் ஏமாற்றம்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 2 மாதங்களுக்கு பின் தோவாளை மலர் சந்தை மீண்டும் திறப்பு: கேரள வியாபாரிகள் வராததால் ஏமாற்றம்
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் தோ வாளை மலர் சந்தையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி, கேரளாவுக்கும் பூக்கள் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. கரோனா ஊரடங்கால் சந்தை மூடப்பட்டிருந்தது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், 2 மாதங்களுக்குப் பின் நேற்று தோவாளை மலர் சந்தை திறக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் வியாபாரம் நடந்தது. உள்ளூர் வியாபாரிகள் பூக்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். ஆனால், ஊரடங்கால் கேரள வியாபாரிகள் வரவில்லை. இதனால் பூக்கள் தேக்கமடைந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in