Published : 13 May 2020 08:46 PM
Last Updated : 13 May 2020 08:46 PM

தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கரோனா; 5 ஆயிரம் எண்ணிக்கையைக் கடந்தது சென்னை; தமிழக பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்தது

தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொற்று அனைத்தும் கோயம்பேடு சந்தை தொடர்புடையவை.

சென்னையில் 380 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 4,882 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 5,262 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தொற்று எண்ணிக்கையில் 53.5 சதவீதத் தொற்று எண்ணிக்கை சென்னையில் உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 9,227-ல் சென்னையில் மட்டும் 5,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 57 சதவீதம் ஆகும்.

மொத்த எண்ணிக்கையில் 64 பேர் இறந்துள்ள நிலையில் இறப்பு சதவீதம் .69% என்கிற அளவில் உள்ளது. மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 24.4 சதவீதமாக உள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவ சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமையில் இருப்பது குறித்து அரசு வலியுறுத்தி வந்தபோதும் பலரும் அதைக் கடைப்பிடிப்பதில்லை. தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணியாமல் இருப்பது என இருப்பதால் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து இன்று ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு அளித்தார். சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்றுக்கு காரணம் கோயம்பேடு சந்தை, அதன் வியாபாரிகள் அரசின் ஆலோசனையை ஏற்காததே என்று தெரிவித்தார்.

கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்றும் கரோனா பாதிப்பு உள்ளோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களின் தினசரி எண்ணிக்கையைவிட ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து வருகிறது. சென்னையும் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிக அளவு எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது.

மகாராஷ்டிராவில் 24,427 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 9,227 எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. குஜராத் அதற்கு அடுத்த இடத்தில் 8,903 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. டெல்லியில் கரோனா தொற்று எண்ணிக்கை 7,639 ஆக உள்ளது.

சென்னையைத் தவிர மீதியுள்ள 15 மாவட்டங்களில் 329 பேருக்குத் தொற்று உள்ளது. 22 மாவட்டங்களில் தொற்று இன்று இல்லை. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் மூன்று இலக்கத்தில் எண்ணிக்கை உள்ளது.

* தற்போது 38 அரசு ஆய்வகங்கள், 18 தனியார் ஆய்வகங்கள் என 56 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக, சிகிச்சையில் உள்ளவர்கள் 6,984 பேர்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,79,467.

* மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 2,68,250.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 12,780.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 9,227.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 509.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 288 பேர். பெண்கள் 221 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 42 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,176 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 3 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 64 ஆக உள்ளது.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 380 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 4,882 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 5,262 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை மட்டும் 5000 என்ற தொற்று எண்ணிக்கையைக் கடந்த நகரமாக உள்ளது. இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாகச் செல்கிறது.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் தொடர்ந்து 2-ம் இடத்தில் 492 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. மூன்றாம் இடத்தில் செங்கல்பட்டு வந்துள்ளது. அங்கு தொற்று எண்ணிக்கை 416 ஆக உள்ளது.

கடலூரில் 413 என்ற தொற்று எண்ணிக்கையுடன் 4-ம் இடத்தில் உள்ளது. 5-ம் இடத்தில் அரியலூர் 348 ஆக உள்ளது. விழுப்புரம் 6-ம் இடத்தில் 306 ஆக உள்ளது. காஞ்சிபுரத்தில் தொற்று எண்ணிக்கை 156 ஆக உள்ளது.

கோவையில் 146, பெரம்பலூரில் 133, திருவண்ணாமலையில் 128 என தொற்று எண்ணிக்கை உள்ளது, மதுரையில் 123, திருப்பூரில் 114, திண்டுக்கல்லில் 111 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை உள்ளது. இவைதான் மூன்று இலக்க எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

17 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற 20 மாவட்டங்களில் தொற்று இல்லை. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 529 பேர். இதில் ஆண் குழந்தைகள் 283 பேர். பெண் குழந்தைகள் 246 பேர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 8,068 பேர். இதில் ஆண்கள் 5,462 பேர். பெண்கள் 2,603 பேர். மூன்றாம் பாலினத்தவர் 3 பேர்.

60 வயதுக்கு மேற்பட்டோர் 630 பேர். இதில் ஆண்கள் 391 பேர். பெண்கள் 239 பேர்.

15க்கும் மேற்பட்டோருக்கு தொற்றுள்ள, நான்கு நாட்களில் எண்ணிக்கை இரட்டிப்பாகும், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 33.

15 நபர்களுக்குக் கீழ் தொற்று எண்ணிக்கை கொண்ட ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 4.

கடந்த 28 நாட்களாக ஒரு தொற்றும் இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் 20 பேருக்குத் தொற்று உள்ளதால் பச்சை மண்டலத்தை இழந்தது.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x