ஏப்ரல் 14-ம் தேதி நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஏப்ரல் 14-ம் தேதி நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்
Updated on
1 min read

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. அதனை மே 3-ம் தேதி வரைக்கும் நீட்டித்து இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது தெரிவித்தார்.

தமிழக அரசு ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,204 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் ஏப்ரல் 13 வரை ஏப்ரல் 14 மொத்தம்
1 சென்னை 206 5 211
2 கோயம்புத்தூர் 126 126
3 திருப்பூர் 79 79
4 திண்டுக்கல் 56 9 65
5 ஈரோடு 64 64
6 திருநெல்வேலி 56 56
7 செங்கல்பட்டு 46 46
8 நாமக்கல் 45 45
9 திருச்சி 43 43
10 கரூர் 41 41
11 மதுரை 39 2 41
12 தேனி 40 40
13 ராணிப்பேட்டை 39 39
14 திருவள்ளூர் 33 33
15 நாகப்பட்டினம் 29 2 31
16 தூத்துக்குடி 26 26
17 விழுப்புரம் 23 23
18 கடலூர் 19 1 20
19 சேலம் 18 1 19
20 திருப்பத்தூர் 17 17
21 விருதுநகர் 17 17
22 கன்னியாகுமரி 15 1 16
23 தஞ்சாவூர் 12 4 16
24 திருவாரூர் 15 15
25 வேலூர் 15 15
26 திருவண்ணாமலை 12 12
27 சிவகங்கை 10 1 11
28 நீலகிரி 9 9
29 காஞ்சிபுரம் 8 8
30 தென்காசி 5

3

8
31 ராமநாதபுரம் 5 2 7
32 கள்ளக்குறிச்சி 3 3
33 அரியலூர் 1 1
34 பெரம்பலூர் 1 1
மொத்தம் 1173 31 1204

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in