

மழலையர் பள்ளிகளுக்கான அரசின் புதிய விதிமுறைகள் குறித்து தனியார் பள்ளிகள் கருத்து தெரிவிக்க 4 வாரம் கால அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏராளமான மழலையர்கள் பள்ளிகள் அனுமதி யின்றி செயல்படுவதாகவும், அங்கே அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அதைத் தடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலசுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசா ரணைக்கு வந்தபோது மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதி முறைகள் வகுக்கப்போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு வகுக்கப்படும் புதிய விதிமுறைகளை அரசு இணையதளத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அரசு இணையதளத் தில் மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, புதிய விதிமுறைகள் தொடர்பாக தாங்கள் கருத்து தெரிவிக்க விரும்புவதாகவும், அவற்றை மனுவாகத் தாக்கல் செய்ய நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 4 வாரம் அவகாசம் அளித்தும், அதற்கு அரசு தரப்பில் அடுத்த இரண்டு வாரத்தில் பதில் அளிக்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.