தங்கம் விலை திடீர் உயர்வு: 15 நாளில் பவுனுக்கு ரூ.1,608 அதிகரித்தது

தங்கம் விலை திடீர் உயர்வு: 15 நாளில் பவுனுக்கு ரூ.1,608 அதிகரித்தது
Updated on
1 min read

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.296 அதிகரித்து ரூ.20 ஆயிரத்து 360-க்கு விற்பனை ஆனது.

ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் தங்கத்தின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி கிராம் ரூ.2 ஆயிரத்து 344 மற்றும் ஒரு பவுன் ரூ.18 ஆயிரத்து 752 என்ற விலைக்கு விற்பனை ஆனது. அதன் பிறகு தினமும் படிப்படியாக விலை ஏற்றம் பெற்றது. நேற்று முன்தினம் கிராம் ரூ.2 ஆயிரத்து 508-க்கும், ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 64-க்கும் விற்பனை ஆனது.

இந்த விலையானது நேற்று மேலும் உயர்ந்தது. நேற்று மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 545 மற்றும் ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 360 என்ற விலையை எட்டியது. ஆகஸ்ட் 6-ம் தேதியுடன் ஒப்பிடும்போது 15 நாளில் பவுனுக்கு ரூ.1,608 அதிகரித்துள்ளது.

மேலும் உயரும்

இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமாரிடம் கேட்டபோது, ‘‘சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாலும், ரூபாய் மதிப்பு விழ்ச்சியடைந் துள்ளதாலும் உள்நாட்டின் தங்கத் தின் விலை உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in