நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தருமபுரி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தருமபுரி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கிராம உதவியாளராக நியமிக்காததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தில் கிராம உதவியாளராக தன்னை நியமிக்கக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு சென்னை உயர்நீ திமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதில் அவரை கிராம உதவியாளராக நியமிக்க தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிக்கு கடந்த 2007-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமல்படுத்தாததால், மாவட்ட ஆட்சியருக்கு எதிராக துரைராஜ் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

அதில், 2019-ம் ஆண்டு வரை பாலக்கோடு பகுதியில் கிராம உதவியாளர் பதவிக்கு யாரும் நியமிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், 4 வார காலத்திற்குள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in