பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கை; உயர்மட்ட குழு அமைத்து கண்காணிப்பு: பிரதமருக்கு பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தல்

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கை; உயர்மட்ட குழு அமைத்து கண்காணிப்பு: பிரதமருக்கு பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறு வனங்களுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதற்கான நடவடிக்கை களை செயல்படுத்த உயர்மட்ட குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பிஎஸ் என்எல் பாதுகாப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.கே.மதி வாணன், பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்ளுக்கு புத்துயிர் ஊட்ட மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்காக, ரூ.15 ஆயிரம் கோடி நிதி திரட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 4ஜி சேவையைத் தொடங்க அலைக்கற்றையும் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போதைக்கு பிஎஸ் என்எல் நிறுவனத்துக்கு மின்கட்டண பாக்கி, ஒப்பந்ததாரருக்கு அளிக்க வேண்டிய தொகை உள்ளிட்டவை செலுத்தப்படாமல் கடந்த 6 மாதங் களாக பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பிஎஸ்என்எல் நிறுவனத் தின் சேவை பாதிக்கப்பட்டுள்ள தோடு, நிறுவனத்தின் மீது ஒரு மோசமான எண்ணம் ஏற்பட்டுள் ளது. எனவே, இந்த பாக்கித் தொகை களை செலுத்த பிஎஸ்என்எல் நிறு வனத்துக்கு, மத்திய அரசு உடன டியாக நிதி வழங்க வேண்டும்.

மேலும், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனத்தில் ஏற்கெனவே ஊழியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில், மேலும் 50 சதவீத ஊழியர்களை விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, பிஎஸ்என்எல் நிறுவனம், நாடு முழுவதும் மிகப் பெரிய உள்கட்டு மான வசதிகளைக் கொண்டுள்ளது. இவற்றைப் பராமரிக்க அதிக அளவு ஊழியர்கள் அவசியம் தேவை. இந்நிலையில், ஊழியர் களைக் குறைத்தால் அவற்றை பராமரிப்பது மிகப் பெரிய சவாலாக அமையும்.

மேலும், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதற்கான நடவடிக்கைகளை செயல் படுத்துதல், கண்காணிப்பதற்கு பிரதமர் அலுவலகத்தின் கீழ் உயர்மட்ட குழுவை அமைக்க வேண்டும். தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையைத் தொடங்க உள்ள நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத் துக்கும் 5ஜி சேவையைத் தொடங்க அலைக்கற்றையை ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு மதிவாணன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in