முதல்வர் காப்பீடு திட்டத்தில் மனநோயும் சேர்ப்பு: நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க வாய்ப்பு

முதல்வர் காப்பீடு திட்டத்தில் மனநோயும் சேர்ப்பு: நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க வாய்ப்பு
Updated on
2 min read

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் மன நோய் சேர்க்கப்பட்டுள் ளது. இதனால் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏழை, எளிய மக் களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் கட்டணம் இல்லாமல் தரமான சிகிச்சை அளிப்பதற்காக தமிழக அரசால் முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1,027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக் கும், 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இத்திட்டத்தில் இது வரை உடல் நோய்கள், அறுவை சிகிச்சைகள், பரிசோதனைகளுக்கு மட்டுமே நோயாளிகள் பயனடைந்து வந்தனர். மனநோய் சேர்க்கப்படா மல் இருந்தது. இதற்கான மருந்து களுக்கும், சிகிச்சைக்கும் அதிகம் செலவாகும்.

அரசு மருத்துவமனைகளில் இந்த மருத்துவத்துக்கான சிகிச்சை வசதி போதிய அளவில் இல்லை. இந்த நோயாளிகள், சில தீவிர மான நோய்களுக்கு மருத்துவ மனைகளில் தங்கி சிகிச்சைப்பெற வேண்டி உள்ளது. இதற்கு தனியார் மருத்துவமனைகளில் அதிகமான செலவு ஏற்படுவதால் ஏழை, எளிய நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் இருந்தது. தற்போது அரசு காப்பீடு திட்டத்தில் மனநோய் சேர்க்கப்பட்டுள்ளது. இது மன நோயாளிகளுக்கு ஒரு வரப்பிர சாதமாக அமைந்துள்ளது.

இதுகுறித்து மனநல மருத்துவர்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டு ஆட்டிசம் நோய் சேர்க்கப்பட்டது. அதனால், அரசு மற்றும் அங்கீகரிக் கப்பட்ட தனியார் மருத்துவமனை களில் இந்த நோய்க்கு முதல் வர் காப்பீடு திட்டத்தில் நிதி வழங் கப்பட்டது. இந்த ஆண்டு முதல் முறையாக காப்பீடு திட்டத்தில் மனநோய் சேர்க்கப்பட்டுள்ளது.

மனச்சிதைவு நோய், பை போலார் (Bipolar) என்றழைக்கப் படும் இரு துருவ மனநோய், போதை பொருட்களால் ஏற்படும் மனநோய், மூளை நரம்பியல் நோய்களால் ஏற்படும் மனநல பாதிப்புகள், உடல்நல பாதிப்பு களால் ஏற்படும் மனநோய், மன வளர்ச்சி குறைபாடு உள்ள வர்களுக்கு ஏற்படும் மனசிதைவுக் கான அறிகுறி நோய்கள் உள்ளிட்ட 6 மனநோய்கள் முதல்வர் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான தீவிர மன நோய்களுக்கு மின் அதிர்வு சிகிச்சை அவசியமாகிறது. இந்த சிகிச்சை நோயாளிகளுக்கு குறைந்தபட்சமாக 4 முதல் 6 முறையாவது வழங்க வேண்டும். ஸ்கேன், ரத்தப் பரிசோதனை உள் ளிட்ட மருத்துவப் பரிசோதனை களும் எடுக்க வேண்டி உள்ள தால் மனநல சிகிச்சைக்கு செல வும் அதிகமாகிறது. தற்போது இவை அனைத்தும் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

முதல்வர் காப்பீடு திட்டத்தில் மற்ற சிகிச்சைகள் இருப்பதால் அதில் கிடைக்கும் நிதி மூலம், அந்த துறைகளின் உட்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் செய்வதற்கு ஏதுவாக இருந்தது. ஆனால், மன நல சிகிச்சை, காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படாமல் இருந்ததால் மன நலத் துறையை மேம்படுத்த முடி யாமல் இருந்தது. தற்போது சேர்க்கப்பட்டுள்ளதால் காப்பீடு திட்டத்தில் வரக்கூடிய பணப் பலன்கள், இந்த துறையை மற்ற துறைகளைப்போல் மேம்படுத்த உதவியாக இருக்கும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in